தேசியப் பட்டியல் ஆசனமொன்றை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது நல்லதே. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரகடனத்தை அமுல்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமொன்றை உருவாக்குவது மிகவும் அவசியமானது என ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
