மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் இடையில் சந்திப்பு!

றியாஸ் ஆதம்-

கில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் (05.07.2015) நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தினை அவரது மன்னார் மாவட்ட சுற்றுலா விடுதியில் வைத்து சந்தித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் எம்.ஏ.சீ நஜீப் தலைமையிலான மத்தியகுழு பிரதான உறுப்பினர்கள் அமைச்சரோடு அட்டாளைச்சேனை பிரதேச அரசியல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். இதன்போது மத்திய குழுவினர் விடுத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தாம் தேர்தலை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தில்; சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கட்சி விஸ்தரிப்பு பணிகளை முன்னெடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது அமைச்சரின் சகோதரரும் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுத்தீனும் கலந்துகொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -