சுலைமான் றாபி-
இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டி இடவுள்ளது.
அந்த அடிப்டையில் அந்தக்கட்சியின் பாராளுமன்ற வேட்பாளராக கல்முனைத் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் , சம்மாந்துறைத் தொகுதியில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. மன்சூர் , பொத்துவில் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் நசீர் ஆகியோர் களம் இறங்குகின்றார்கள் என அறியமுடிகின்றது.
அத்துடன் மன்சூரின் மாகாண சுகாதார அமைச்சுப் பதவி மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
