சுலைமான் றாபி-
நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (11.07.2015) நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். எம். சாஹிர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல். நிசாமுடீன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எம். மீராசாஹிப் உள்ளிட்ட நிந்தவூரில் காணப்படும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் விஷேட அம்சமாக நிந்தவூரில் முதன் முதல் "முப்தி" பட்டம் பெற்ற மௌலவி எச்.எம். மின்ஹாஜ் அவர்களினை நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் கௌரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.



