ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த 'கருத்துச் சுதந்திரம், மகிழ்ச்சி நிறைந்த நாடு, கைகள் நிரம்பி வழியும் பொருளாதாரம்' எனும் தொனிப் பொருளிலான விசேட மாநாடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் தற்போhது நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் நாடுபூராகவுமுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக போட்டியிடும் பெரோசா முஸம்மில் தனது ஆதரவாளர்கள் சகிதம் கெம்பல் மைதானத்தை நோக்கி ஊர்வலமாக செலவதை காணலாம்.





