எம்.வை.அமீர் -
இதுவரைகாலமும் இருளில் மூழ்கிக்கிடந்த சாய்ந்தமருது தோணா வீதியின் முகத்துவாரத்தை அண்டிய பகுதி 2015-07-06 முதல் ஒளியூட்டப்படுகின்றது.
கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது தோணா வீதி இதுவரையும் மின்சார வசதிகளற்றதாக இரவு வேளைகளில் மிகுந்த இருள் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக சட்ட விரோத நிகழ்வுகள் நடைபெறும் இடமாகவும் காணப்பட்டது. இப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்ட உடலத்தைக் கூட இருள் நிறைந்த தோணாவில் போட்டுவிட்டுச்சென்றிருந்தனர்.
மிகுந்த இருள் நிறைந்தத இவ்வீதியால் இரவு வேளைகளில் பயணம் செய்வதும் மிகுந்த அச்சுறுத்தலான ஒன்றாக காணப்பட்டது.
சாய்ந்தமருது தோணா வீதி தொடர்பாக கருத்தில் கொண்ட கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம் பர்ஹான் அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொன்டதன் பயனாக முதற்கட்டமாக முகத்துவாரத்தை அண்டிய வீதிக்கு புதிய மின் கம்பங்கள் இடப்பட்டு மின்சார கேபிள்கள் இடப்பட்டிருந்தன.
2015-07-06 காலை வேளையில் இஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையிலான குழுவினர் குறித்த இடங்களுக்கு மின்விளக்குகளை பொருத்தினர்.
இப்பிராந்தியத்தின் நீண்டகால தேவை பூர்த்தியானதையிட்டு மக்கள் மகிழ்ச்சியும் சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர்.
