(மலையகம்) கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கிடையிலுமான பேச்சுவார்த்தை ஆரம்பம்!

க.கிஷாந்தன்-

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இரண்டு வருட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ம் திகதியோடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கிடையிலுமான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கம்பனிகள் வழங்க வேண்டும் என கோரி கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு இணக்கம் தெரிவிக்காததையடுத்து 06.07.2015 அன்றைய தினம் தோட்ட தொழிலாளர்களை மெதுவான பணிகளில் ஈடுப்படுமாறு தொழிற்சங்கள் அறிவித்தது.

மலையக பகுதிகளில் அனைத்து தோட்டங்களிலும் தொழிற்சங்க பேதமென்று இவ்விடயத்தில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

அத்தோடு ஒவ்வொரு தொழிலாளரும் குறைந்த கிலோ கொழுந்து பறித்ததாகவும் தோட்ட நிர்வாகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -