வித்தியா கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்!

யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மூவர் ஆஜராகியுள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் இவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலைமைகளை அவதானிப்பதற்காகவே வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் வித்தியா கொலை வழக்கில் அழையாமல் நுழைந்துள்ள இவ் மூன்று சட்டத்தரணிகள் குறித்து என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? அல்லது வித்தியா கொலை வழக்கை சட்டத்தரணி தவராசா அவர்களிடமிருந்து பரித்தெடுத்து வழக்கு விசாரணையை குழப்பும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -