நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருதில் ஹர்த்தால்!

எம்.வை.அமீர் - 

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு 2015-06-15 ல் சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம் மற்றும் நிறுவனங்கள், பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப்போக்குவரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விவிற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் மாணவர்களின் வருகையின்மையால் வெறிச்சோடிக்கிடந்தன.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடிய திரளான நகரசபைக் கோரிக்கையாளர்கள் தொழுகையிலும் துஆ பிராத்தனையிலும் ஈடுபட்டதுடன் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரகடனம் ஒன்றும் செய்யப்பட்டதுடன் அமைதி ஊர்வலமும் இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -