ஜெமீலின் நண்பரிற்கு றிஸாத்தின் இணைப்பாளர் பதவி!

T.T LANKA OVERSEAS (PVT) நிறுவனத்தின் பணிப்பாளரும், பிர பல சமூக சேவையாளரும்,சாய்ந்தமருது மு.கா வின் தீவிர போராளியும்,தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களினது வலக் கரமாகவும் உற்ற நண்பராகவும் செயற்பட்டு வந்த அகமட் லெப்பை முக்தார் (ஜஹான்) அவர்கள் அமைச்சர் றிஸாத்தின் அமைச்சின் கீழ் உள்ள பதவிகளில் ஒன்றான ஏற்றுமதி அபிவிருத்து அதிகார சபையின் இணைப்பாளராக அமைச்சர் றிஸாத் அவர்களினால் இம் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.கா வின் போக்கில் அதிருப்தியுற்ற இவர் அண்மைக்காலமாக மு.கா வின் அரசியல் செயற்பாடுகளினை விட்டும் விலகி அமைதியாக இருந்தார்.

இவ்வாறு இருந்த இவரின் மீது சந்தேகம் கொண்டு மு.கா வினர் மேற்கொண்ட சில காழ்ப்புணர்வுச் செயற்பாடுகளும்,முஸ்லிம்களுக்காக மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பாணியில் குரல் கொடுக்கும் அமைச்சர் றிஸாத் அவர்களினை அரசியல் ரீதியாக பலப் படுத்தும் முகமாகவும் இவர் அ.இ.ம.கா இல் இணைந்து கொண்டதாக குறிப்பிட்டார்.ச

துறையூர் எ.கே மிஸ்பாஹுல் ஹக்
(சம்மாந்துறை நிருபர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -