நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 06-06-2015 நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலத்தில் இடம்பெற்றது.
இவ் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ பிரச்சினைக்கான தற்போதய தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு,தேசிய அரசியல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) ஆகியோரினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பு முழுமையாக இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
