சிகரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் தொகுதியை ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வை!

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் 60 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் வன் செயல்களினால் இடம்பெயர்ந்து வீடுகளை கட்டுவதற்கு வசதி இல்லாமல் தகரக் கொட்டில்களில் வாழ்ந்து வரும் சிகரம் கிராம மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு முடியும் தருவாயில் காணப்பட்டு வரும் குறித்தி வீட்டுத் தொகுதியின் அபிவிருத்திப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 

06-06-2015 நேற்று சனிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து சிகரம் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற சிகரம் பொது மக்களுடனான விஷேட சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

இதில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிருவாகிகள், சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகிகள்,சிகரம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,சிகரம் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பழுலுல்லாஹ் பர்ஹான்
(காத்தான்குடி பிரதான நிருபர்)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -