செங்கலடி பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு!

முர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம் பெற்றது.

செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன், வாழைச்சேனை கோறளைப்பற்று திவிநெகும பணிப்பாளர், திவிநெகும வங்கி முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கடன் தொகைக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இறுநூற்றி நாற்பத்தைந்து திவிநெகும பயனாளிகளுக்கு 20.5 மில்லியன் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

ந.குகதர்சன்,
(வாழைச்சேனை நிருபர்)








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -