சவூதி அரேபிய தூதரகத்தின் இப்பதார் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கைத்தொழில் , வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன் ,அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் ஏ.எச் எம்.பௌஸி. நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, அஸ்லம் ,முத்தலி பாவா பாறூக் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அஸாத் சாலி, நௌசர் பௌஸி , இலக்கியப்புரவர் ஹாஸிம் உமர் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




