எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி தீவிரவாத படையெடுப்புகள் வங்கிகளுக்குள் நுழைவதாகவும் இது தொடர்பில் சமூக விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் கண்டுகொள்ளாத கடந்த அரசாங்கம் குறித்து குற்றம் சுமத்துவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கொழும்பு மத்திய வங்கி வளாகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வங்கி வரலாற்றில் இஸ்லாமிய வங்கி சேவையை அறிமுகப்படுத்தியதன் ஊடாக நிதி கட்டளை சட்டமூலம் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொதுபல சேனா இயக்கத்தினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
