(கல்முனை) வீடொன்றின் மேல் விழுந்த 11 ஆயிரம் மின்னழுத்த மின்கம்பி!

எம்.எம்.ஜபீர்-
ல்முனை மத்தியமுகாம் பிரதான வீதியின் நற்பிட்டிமுனை பிரதேச வீடொன்றில் 11 ஆயிரம் மின்னழுத்தம் (11000 Votes) கொண்ட மின்கம்பி அறுந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டின் முற்பக்க அறையில் இருந்த பொருட்கள் எரிந்த சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் போது வீட்டிலுள்ளவர்கள் அறையினுள் இருந்ததனால் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. மின்கம்பி அறுந்து வீழ்ந்த சிலநொடிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் விளைவாகவே பேராபத்துக்களிலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தை கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்களும் அவ்விடத்திற்கு விரைவாக விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஏ.முகம்மட் சீத் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு மின்கம்பி அறுந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -