கல்முனை மத்தியமுகாம் பிரதான வீதியின் நற்பிட்டிமுனை பிரதேச வீடொன்றில் 11 ஆயிரம் மின்னழுத்தம் (11000 Votes) கொண்ட மின்கம்பி அறுந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டின் முற்பக்க அறையில் இருந்த பொருட்கள் எரிந்த சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் போது வீட்டிலுள்ளவர்கள் அறையினுள் இருந்ததனால் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. மின்கம்பி அறுந்து வீழ்ந்த சிலநொடிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் விளைவாகவே பேராபத்துக்களிலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தை கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்களும் அவ்விடத்திற்கு விரைவாக விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஏ.முகம்மட் சீத் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு மின்கம்பி அறுந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



