முறக்கொட்டான்சேனை அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மகோற்ச பெருவிழா



ந.குகதர்சன்-

ட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மகோற்ச பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மஹோற்சவ பிரதம சிவச்சாரியார் சபரிமலை குருஸ்வாமி, சபரீச கான வினோதன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவச்சாரியர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று, கொடியேற்றப்பட்டு பின்னர் வசந்த மண்டப பூசை இடம்பெற்று அம்மன் ஆலய உள்வீதி வலம் வந்தார்.

சனிக்கிழமை கொடியேற்றத்துடன் அரம்பமாகிய அம்மனின் மகோற்சவ பெருவிழா பன்னிரண்டு நாட்கள் உற்சவம் இடம்பெற்று எதிர்வரும் 01ம் திகதி புதன்கிழமை காலை தீ மிதிப்பு மற்றும் களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -