தேசிய வீடமைப்பு தினம் ஜூன் 23ஆம் திகதி..!

தேசிய வீடமைப்பு தினம் ஜூன் 23ஆம் திகதி ஹம்பந்தோட்டையில் கொண்டாப்படுகின்றது. இத்தினத்திற்கு பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். இந் நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறும். இத் தினத்தினை கொண்டாடுமுகமாக கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவையில் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் ஜூன் 23 தொடக்கம் 31ஆம் திகதிவரை தேசிய வீடமைப்பு வாரமும் அனுஸ்டிக்கப்படும். இத்திட்டத்தினால் வீடமைப்பு பற்றிய பல்வேறு அனுகூலங்கள் மக்களுக்கு கிடைக்கப்பெற உள்ளன.

மேற்கண்டவாறு இன்று வீடமைப்பு சமுhத்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் செயலாளர் விமல சிரி பெரேரா தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். பலன்சூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டார். 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 1979 ஜூன் மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதனையிட்டு 24 மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நாடுமுழுவதிலும் நடைபெறுகின்றன.

தேசிய வீடமைப்பு தினத்தில் ஜூன் 22ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கு முதலாவது தேசிய வீடமைப்பு கொடி அனிவிக்கப்படும். அத்துடன் இக் கொடி நாடு முழுவதிலும் விற்கப்படும். அத்துடன் 'தேசிய வீடமைப்பு தினத்திற்கான முத்திறையொன்றும் வெளியிடப்படும்.

செவன நிதியத்தின் முலம் கட்டிட நிர்மாணப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும். 

அத்துடன் தேசிய வீடமைப்பு வாரத்தில் மத அனுஸ்டனாங்கள் அனுஸ்டிக்கப்படும். அத்துடன் ஜூன் 23ஆம் திகதி காலை 09.00 மணிக்கு தெவிராவ பொது மைதாணத்திலும் பி.பகல் 02.00 மணிக்கு தங்கல்லையிலும் மாநாடு நடைபெறும். இத்தினத்தில் 50ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் பற்றி இம்மாநாட்டில் தெளிவுபடுத்தப்படும்.

மகளிர் தினம்- நாடு முழுவதிலும் வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தில் 55 வீதமான மகளிர் மிகவும் பங்கு கொண்டுள்ளதால் அவர்களுக்கு இவ் திட்டங்கள் பற்றி அறிவுறுத்தப்படும். 

இளைஞர் தினம், அத்துடன் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் கீழ் உள்ள நிர்மாண, பொறியற் நிறுவனங்களின் பங்கு பற்றுதலோடு வீடுகள் நிர்மாணிக்கும் பொறிமுறையின் கீழ் பல்வேறு வேளைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

அத்துடன் ஜூன் 27ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கிடையே தேசிய வீடமைப்பு தினத்தினை முன்னிட்டு ஓவியம், கட்டுரை, நாடகப் போட்டிகள் நடாத்தப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -