“சிலாவத்துறையே மறந்து போன ஓர் ஆற்றல் மிகு புலவரை இளம் சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தும் வலம்புரி கவிதா வட்டத்தின் பணி மிகவும் பாராட்டிற்குரியது. அதற்காக சிலாவத்துறை மண்ணே வகவத்திற்கு கடமைப்பட்டுள்ளது”
என வகவத்தின் 16வது பௌர்ணமி கவியரங்கின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனப் பணிப்பாளார் சமூகஜோதி எம்.ஏ.ரபீக் தெரிவித்தார்.
“நொண்டிப்புலவர் என அழைக்கப்பட்ட முஹம்மத் ஷெரிப் புலவர் 1912ம் ஆண்டு பிறந்தார். 4ம் வகுப்பு வரையே படித்திருந்த அவருக்கு ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டபோனபோது ஓர் அருளாகவே கவிதை ஞானம் கிடைத்தது. அது எப்படி கிடைத்தது என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று காட்டில் அவர் சந்தித்த பொpயவா; வேண்டுகோள் விடுத்தும் அதனை அசட்டைச் செய்து வெளியே சொன்னதனால் உடனே கை கால்கள் முகம் ஆகியவை சூம்பி ஓர் அவலட்சண நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. சீறாப்புராணத்திற்கு விளக்கம் சொல்வதில் விற்பன்னரான அவரின் விளக்கத்தினைக் கேட்பதற்காக மக்கள் பெருங் கூட்டமாய் கூடுவா;. அவரது தோற்றம் அருவருப்பாக இருந்த போதிலும் அவரது புலமைக்காக அவருடன் பெருவிருப்புடன் மக்கள் பழகினா;. 1967ல் ஹஜ்ஜுக்குச் சென்றார்.1968ல் திருமணம் முடித்தார். 1969ல் ஒரு ஆண் மகனுக்குத் தந்தையானார். 1972ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். நபிகள் நாயகம் பற்றியும், ஏசுநாதா; பற்றியும் எல்லா சமயங்கள் பற்றியும் அவர் பாடல் இயற்றியுள்ளார். இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.”
என தனது சிறப்புரைக்குள்ளே சமூகஜோதி ரபீக் முஹம்மத் ஷெரிப் புலவர் பற்றியும் மிகவும் சுவாரஷியமாக உரையாற்றினாh;.
வகவத் தலைவா; என்.நஜ்முல் ஹுசைனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அண்மையில் காலமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளா; அல்ஹாஜ் இஸட்.எல்.எம் முஹம்மத், வகவச் செயலாளா; இளநெஞ்சன் முh;ஷதீனின் தாயார் இஸ்ஸதுல் பரீதா பதுர்தீன் ஆகியோர் ணர். கடந்த நாட்களில் எம்மைவிட்டுப் பிரிந்த ஜெயகாந்தன், கமலினி செல்வராஜன், நாகூர் ஈ.எம்..ஹனீபா, அறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோரும் முன்னைய நிகழ்வில் நினைவுக் கூரப்பட்டனா; என்பது குறிப்பிடத்தக்கது.
16ஆவது கவியரங்கம் கவிஞர் பாடலாசிரியர் எஸ் தனபாலனின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மறைந்த ஸ்ரீதா; பிச்சையப்பா பாடிய “ஓடை சலசலக்க …….”
என்ற பாடலை இயற்றியவர் கவிஞர் எஸ்.தனபாலன்.. அவர் மிகவும் சுவாரஷியமாக கவியரங்கை நடாத்தினார். கவியரங்கில் கவிஞர்கள் தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஹைப் எம் காசிம், கலாபூஷணம் எஸ்ஐ.நாகூர் கனி, கவிக்கமல் ரஸீம், நாச்சியாதீவு ரினோஸா நௌசாட், வெளிமடை ஜஹாங்கீர், கலாபூஷணம் மஸீதா அபூபக்கர், புத்தூர் தர்மகுலசிங்கம் கவிநயன், பிரேம்ராஜ், முபாரக் அப்துல் மஜீத், இளநெஞ்சன் முர்ஷிதீன், உஸ்மான் மரிக்கார், கிண்ணியா அமீh; அலி, கலைக்கமல், கலைவாதி கலீல், ஷங்கா; கைலாஷ், கலாபூர்ஷணம் எஸ்.ஏ.கரீம், மட்டக்களப்பு லோகநாதன், மேமன்கவி ஆகியோh; கவிமழைப் பொழிந்தனா.
தமிழ்மணி மானா மக்கீன், த.மணி, எம்.எஸ்எம்.ஜின்னா, மனிதநேயன் இர்ஷாத் ஏ. காதர், ஈழகணேஷ், கலாவிஸ்வநாதன், நிஸார் ரஹீம், எஸ்.எச்எம்.இத்தீரிஸ், தமிழ்த்தென்றல் அலி அக்பர், ருஷைக்கா நாகூர்; கனி, இஸபரா ஹைஸா; போன்றோர்; சபையை அலங்கரித்தனர்.
கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர்கனி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நன்றியுரை வழங்கினார். ஜூலை மாத கவியரங்குத் தலைவராக சந்தக்கவி கிண்ணியா அமீர் அலியின் பெயர் அறிவிக்கப்பட்டது.