அகில இலங்கை YMMA பேரவையின் நேர்முகப் பரீட்சை!

சுலைமான் றாபி-
கில இலங்கை YMMA பேரவையின் "வை" சகாத் நிதிய புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று (02) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் கே.எல். சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்நேர்முகப் தேர்வுக்கு அகில இலங்கை YMMA பேரவையின் செனட் சபை உறுப்பினரும், முன்னாள் தலைவருமான சட்டத்தரணி நதீவ் வஹாப்தீன், தேசிய பொதுச்செயலாளர் எம்.என்.எம். நபீல், தேசிய உப செயலாளர் எம்.ஏ. உதுமாலெவ்வை, அம்பாறை மாவட்ட ஆலோசகர் ஏ.அஹமட்லெவ்வை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்நேர்முகத்தெரிவினை நடாத்தினர்.

க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியெய்தி உயர்தரத்திற்குத் தெரிவான அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள மாணவ மாணவிகள் இந்நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை இதில் தெரிவாகும் மாணவர்களுக்கு அகில இலங்கை YMMA பேரவையினரால் மாதாந்த உதவித்தொகையாக ரூபா 1,000/= வழங்கப்படுவதோடு இந்த ஊக்குவிப்புத் தொகையானது தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -