இலங்கைக்கு எந்த நாட்டுடனும் விரோதம் இல்லை!

சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேஷனி கோலோன்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சீனாவிற்கு விஜயம் செய்தமையை இங்கு சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கூறினார். 

இலங்கை உலகின் எந்தவொரு நாட்டுடனும் விரோதம் காட்டுவதில்லை எனவும் நடுநிலையாகவே செயற்படுவதாகவும் மகேஷனி கோலோன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -