வேறு மாகாணங்களில் இருந்து இடமாற்றம் பெறும் ஆசிரியர்களுக்கு, மன்னார் வலயத்தில் இடமில்லை!

ஏ.சி.ஏ. மிஸ்காத்-

மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்தின் கீழ், வடமேல் மாகாணம், புத்தளம் கல்வி வலயத்தில் இருந்து சில ஆசிரியர்கள் வடமாகாணம், மன்னார் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். குறித்த ஆசிரியர்களை வடமேல் மாகாண கல்வி அமைச்சு, வடமாகாணத்திற்கு விடுவிப்தற்கு அனுமதி வழங்கியது.

இதனை ஏற்று, வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு வடமாகாண கல்வி அமைச்சிடம் பரிந்துரைசெய்து கடிதம் அனுப்பியது. அதற்கு வடமாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்ட ஆசிரியர்களை மன்னார் கல்வி வலயத்திற்கு விடுவிக்க வெற்றிடம் இல்லையெனவும், மடு கல்வி வலயத்தில் கடமையாற்ற சம்மதம் தெரிவிப்பின், வடமேல் மாகாணத்திலிருந்து வடமாகாணத்திற்கு பதிலாசிரியரின்றி ஏற்றுக்கொள்ள எதுவித ஆட்சேபனையும் இல்லை என பதில் அனுப்பியுள்ளது. (கடித இலக்கம் NP/3/1/5/TT/IN/106-112/2015)

எனினும் மேற்படி இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்த இவ் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறிவாழவே விண்ணப்பித்தனர்.

அத்தோடு மன்னார் கல்வி வலயத்திலேயே இவர்களது கிராமங்கள் அமைந்துள்ளதால், அப்பிரதேசத்திலேயே தொழிலை பாரம் எடுத்து, மீள் குடியேறி வாழமுடியும். இல்லாவிடின் இவர்கள் மீள் குடியேற்றம் தடைப்படும். மீண்டும் இவர்கள் சொந்த இடங்களில் குடியேறி வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். 

மேலும் இவர்களது கிராமம் அமைந்துள்ள, மன்னார் கல்வி வலயத்தின், முசலி கல்விக் கோட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான ஆளனிப் பற்றாக் குறை நிலவுகின்றமை குறிப்பிட தக்கது.sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -