ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்!

னாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இராணுவத்தினர் சிலர் ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அகற்றப்பட்டுள்ளனர். 

சேவை நிமித்தம் இராணுவ வீரர்கள் முன்னர் பணியாற்றிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். 

நிர்வாக தேவை கருதி முன்னாள் ஜனாதிபதி உருவாக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு படை பிரிவில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இருந்துள்ளனர். 

அதன்படி, அந்தப் பிரிவில் இருந்த அனைத்து இராணுவத்தினரும் தாங்கள் முன்னர் பணியாற்றிய இராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றி ஹம்பாந்தோட்டை கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இராணுவ கொப்ரால் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -