மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவில்லை - வாசன்!

மிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவுக்காக நேற்று இராமநாதபுரம் வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்கிறது. எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்று இலங்கை அமைச்சரின் அச்சுறுத்தல் பேச்சு கண்டிக்கத்தக்கது. 

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினர் சேதப்படுத்திய தமிழக படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், எனக் குறிப்பிட்டார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -