நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்காக, இலங்கையில் இருந்து மற்றுமொரு குழு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இன்று காலை 10.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலேயே இவர்கள் புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் சகிதம் இவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை முன்னதாக இரண்டு உதவிக் குழுக்கள் இலங்கையில் இருந்து நேபாளத்திற்கு சென்றுள்ள நிலையில், இவர்கள் மூன்றாவது குழுவென்பது குறிப்பிடத்தக்கது.(ந)
