கவிஞர் ஏ.எல்.காலத்தீனின் "தாயே உன்னை தாலாட்டுகிறேன்" நூல் வெளியீட்டு விழா!

அபு அலா –
ள்ளிக்குடியிருப்பு கவிஞர் ஏ.எல்.காலத்தீன் எழுதிய "தாயே உன்னை தாலாட்டுகிறேன்" நூல் வெளியீட்டு விழா ஏ.எம்.சஹிட் தலைமையில் பள்ளிக்குடியிருப்பு திறந்த வெளியரங்கில் நேற்றிரவு வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். 

மேலும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மௌலவி எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி, பள்ளிக்குடியிருப்பு பிரதேச சபை உதவி தவிசாளர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

"தாயே உன்னை தாலாட்டுகிறேன்" நூலின் முதல் பிரதியினை நூலாசிரியர் கவிஞர் ஏ.எல்.காலத்தீன் பிரதம அதிதியிடம் வழங்கி வைத்தார். 

இரண்டாம், மூன்றாம் பிரதிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் ஏனைய பிரதிகளை இந்த நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.(ந)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -