பாறுக் ஷிஹான்-
தகவல் மற்றும் வழிகாட்டலுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.
இதன் போது முஸ்லீம் மீள்குடியேற்றமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஆரம்பமாகி அம்மக்களின் இந்திய வீடமைப்பு,காணி,சுயதொழில் வாய்ப்பு,கல்வி,சுகாதாரம்,சமூர்த்தி போன்ற பிரச்சினைகள் அது குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்,வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்,மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் நிபாஹிர் மற்றும் பிரத்தியேக செயலாளர் என்.அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)