ந.குகதர்சன்-
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு நேர கடுகதி புகையிரத்தில் மோதுண்டு செவ்வாக்கிழமை இரவு இளைஞன் ஒருவன் உயிரிந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாவடிவேம்பு பிரதேசத்தில் வசிக்கும் செல்வம் மகேந்திராஜா (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. உயிரிழந்த இளைஞன் கொழும்பில் விமானப் படையில் தொழில் புரிவதாக தெரிய வருகின்றது.
புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் சடலத்தை புகையிரம் மூலம் வாழைச்சேனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் குறித்த மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு இளைஞன் புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


