மாவடிவேம்பு பிரதேச இளைஞன் புகையிரத்தில் மோதுண்டு பரிதாப மரணம்!

ந.குகதர்சன்-
ட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு நேர கடுகதி புகையிரத்தில் மோதுண்டு செவ்வாக்கிழமை இரவு இளைஞன் ஒருவன் உயிரிந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாவடிவேம்பு பிரதேசத்தில் வசிக்கும் செல்வம் மகேந்திராஜா (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. உயிரிழந்த இளைஞன் கொழும்பில் விமானப் படையில் தொழில் புரிவதாக தெரிய வருகின்றது.

புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் சடலத்தை புகையிரம் மூலம் வாழைச்சேனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதத்தில் குறித்த மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு இளைஞன் புகையிரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -