சுலைமான் றாபி,றபீக் பிர்தௌஸ்-
இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் "இன்றுள்ள பாடங்களும், இனியுள்ள கடமைகளும்" எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற பிரமுகர் மாநாடு நேற்றையதினம் (23) நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அமீர் ஆர். ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இப்பிரமுகர் மாநாட்டில் தெளிவுரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் நிந்தவூரில் காணப்படும் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மார்க்கப் பெரியார்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மற்றும் விளையாட்டு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து பயன் பெற்றனர்.
இதில்,
இனவாதப் புயல் தனிந்து
ஆட்சிக்கொடுமை ஒழிந்ததென்று
நீண்டதொடு பெருமூச்சு
நீண்ட இளைப்பாறுதல்
நிறுத்தி வையுங்கள் - உங்கள்
நினைப்புக் கடுகதியி
எங்களை நாங்கள்
மறுபார்வை செய்ய
அளவிலா அருளாளன்
எழுதிவைத்த பருவகாலம்
ஓய்வெடுக்க
உலகமென்ன சுவனமா?
இது ஒரு கருமபீடம்
கர்மம் செய்
பணி புரி !
சான்றோர் சாதனை சுவாசி!
இன்றைய பாடங்கள் படி
இனியுள்ள கடமைகள் செய்
மதிப்பெண் மறு உலகில்
ஓய்வு சுவனத்தாயகத்தில்!
எனும் கவி வரியுடன் அழைப்பிதல் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.(ந)