ஜெயலலிதாவின் பச்சை நிறம், சனிக்கிழமை இரகசியம் என்ன?

முதலமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை பதவி ஏற்றார். இந்த விழாவுக்கு அவர் பச்சை நிற புடவை அணிந்து வந்திருந்தார். பதவி பிரமாண பதிவேட்டில் அவர் கையெழுத்திட்ட பேனாவின் நிறமும் பச்சை. கையில் அவர் அணிந்திருந்த மோதிரமும் பச்சை நிறத்திலேயே இருந்தது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் பச்சை நிற புடவை அணிந்திருந்தார். 

தமிழக முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார். இதுவரை அவர், திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலேயே பதவியேற்றுள்ளார். 

1991ம் ஆண்டு ஜூன் 24ம் திகதி முதல் முறையாக பதவியேற்ற கிழமை திங்கள். 2001ம் ஆண்டு மே 14ம் திகதி முதல்வராக பதவியேற்றதும் திங்கள். 3வது முறையாக 2002ம் ஆண்டு மார்ச் 2ம் பதவியேற்றது சனிக்கிழமை. 4வது முறையாக 2011ம் ஆண்டு மே 16ம் திகதி அவர் பதவியேற்றது திங்கள். தற்போது 5வது முறையாக அவர் பதவியேற்றுள்ளதும் சனிக்கிழமையில் தான். 

கடந்த முறை சனிக்கிழமையில் பதவியேற்ற போதும் அவர் எம்.எல்.ஏ.,வாக இல்லை. தற்போது பதவியேற்ற போதும் அவர் எம்.எல்.ஏ.,வாக இல்லை.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -