ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை அமைத்து யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு!

திர்வரும் 28ஆம் திகதி ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதலமைச்சரும், சீட் நிறுவனமும் இணைந்து ஹமீதியாஸ் நிறுவனம் பாரம்மெடுத்துள்ள இந்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் 28ஆம் திகதி புதன் கிழமை ஆரம்ப கட்ட வேலை இடம்பெறவுள்ளது. 

ஆரம்பக்கட்ட வேலை தொடர்பாக இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் சீட் அமைப்பின் அதிகாரிகளும், ஹமீதியாஸ் நிறுவன அதிகளும் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட இந்த ஆடைத்தொழிற்சாலை அரசதுறை நிரந்தர வாழ்வாதாரத்திட்டம் என்பதுடன், இதன் மூலம் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி வாழ்வாதரத்தினைப் பெருக்கும் முயற்சியாகவும் இது அமையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.(ந-த்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -