மே தினக் கூட்டம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஒரு மே தினக் கூட்டமும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மற்றுமொரு மே தினக் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு மே தினக் கூட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் மே தினம் நடத்துவதே சிறந்தது என அவர் தெரிவித்தார்.
