ஓட்டமாவடி இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.ஹணீபா திடிரென இடமாற்றம்...!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

கோரளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.ஹணீபா திடிரென அமுலுக்குவரும் வகையில் மாவட்ட இளைஞர் சேவை அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கல்குடா பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால் இவ் இடமாற்றம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.அதேவேளை இவரின் சகோதரரான தோப்பூர் உதவி அரசாங்க அதிபராக தற்போது பணி புரிகின்ற ஏ.எம்.தாஹீர் கடந்த வருடம் இடமாற்றம் பெற்று கோறளைப்பற்று  மத்திக்கு வந்தபோது இவ் இடமாற்றத்தையும் அவ் அரசியல்வாதி தடுத்து நிறுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கல்குடா மஜ்லிஸ்-அஸ் சூறா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்குடா குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகானும் வகையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,தேசிய நீர் வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வேளைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருந்ததன் பின்னனியோடு இவ்விடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அத்தோடு இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.ஹணீபா கல்குடா பிரதேசத்திற்கு குடிநீர் திட்டத்தினை கொண்டுவருவதற்கு உழைத்த கல்குடா மஜ்லிஸ்-அஸ் சூறா அமைப்பின் பிரதான செயற்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக இடமாற்றங்கள் செய்யப்படுவது வருந்தத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -