கிழக்கு மாகாண அமைச்சுக்களின் திணைக்கள ஊழியர்களின் சந்தோஷத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று 24 கிழக்கு மாகாணசபை ஆளுனர் காரியாலயத்துக்கு முன்னாள் உள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்விளையாட்டுப்போட்டியில் கிழக்கில் உள்ள மூவின மக்களும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின மக்களும் சந்தோஷத்துடன் பங்குபற்றிய முதலாவது விளையாட்டு நிகழ்வாகவும் இவ்விளையாட்டு நிகழ்வு அமைந்திருந்தன.
கலை, கலாச்சார நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளை கண்டுகளிக்க ஆளுனர் ஒஸ்றின் பெர்ணாண்டோ, முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மற்றும் உயரதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)