முஸ்லிம் ஆசிரியர் நியமனம் தொடர்பில் விசேட சந்திப்பு!

எம்.வை.அமீர்-
மிழ்மொழி மூல ஆசிரியர் நியமனம் தொடர்பாக விசேடக் குழு கல்வி அமைச்சரை சந்தித்தது. பெருந்தோட்டப் பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014.08.08 வர்த்தமானி அறிவித்தலின் படி 3024 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடத்திய போட்டிப் பரிட்சையில் தோற்றிய முஸ்லிம்களை புறக்கணித்து நியமனத்தை தமிழர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு கல்வி அமைச்சு முடிவடுத்து இருந்தது.

இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாத் பதீயுத்தீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹகீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல். எஸ். ஹமீத் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் முஹ்ளிஸ் வஹாப்தீன், மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம். எஸ். எம். முஸம்மில் உள்ளிட்ட குழுவினர் 21.04.2015ல் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசதுடன் கல்வி அமைச்சில் சந்தித்து ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அமைச்சரிடம் எடுத்து விளக்கினர். அதனைத் தொடர்ந்து அதற்குரிய விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று மிக விரைவில் சமர்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -