பா.உ அருந்திக்க பெனாண்டோவின் இணைப்புச் செயலாளர் மீது தாக்குதல்!

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெனாண்டோவின் இணைப்புச் செயலாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் நேற்று (05) இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சுஜித் பிரியந்த ஹப்புகாமி என்பவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனது வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கியால் தாக்கி பின் கத்தியால் வெட்டியதாக இணைப்புச் செயலாளர் கூறியுள்ளார். 

தாக்குதல் நடத்திய ஒருவர் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நண்பர் என காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -