அம்பாறையில் ரணில் பங்கு பற்றிய கூட்டத்தில் அமளி!

 ம்பாறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்னவுக்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஹூ சத்தமிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பீ. தயாரத்ன மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன் 7 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே மேடைக்கு வருமாறு அழைத்த போது தயாரத்ன மேடையில் ஏறி உரையாற்றினார். அப்போது இரண்டு முறை அவருக்கு எதிராக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹூவென சத்தமிட்டனர்.

எனினும் தொடர்ந்தும் பேசிய தயாரத்ன, அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய சேவையை விளக்கினார்.

அவர் அக்கூட்டத்தில் தெரிவிக்கையில்;

 கூட்டத்தில் இருக்கும் ஓரிருவருக்கு நான் செய்த சேவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.

இந்த எதிர்ப்புக்கெல்லாம் நான் அஞ்ச போவதில்லை எனக் கூறினார். அப்போதும் கூட்டத்தில் இருந்தவர்கள் ஹூவென சத்தமிட்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன் எதனையும் கூறாமல், எதுவும் தெரியாதவர்கள் போல் காணப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -