நாளை பசில் ராஜபக்ச மோசடிகள் பற்றிய ஊடகவியலாளர் மாநாடு!

அஸ்ரப் ஏ சமத்-

நாளை திவிநகும- சமுர்த்தி முகாமையாளர்கள், அதிகாரிகள் சங்கம் இணைந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச் பற்றிய ஊடகவியலாளர் மாநாடு.

சமூர்த்தி திவிநகும நிறுவனங்களில் செய்த நிதி மோசடிகள், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசியல் ரீதியில் இணைப்பாளர்கள் நியமணங்கள், 16500 பட்டதாரிகளை நியமனங்கள் செய்து அவர்களுக்கு உரிய வசதிகள் செய்யாமை மற்றும் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம். தேர்தல் காலத்தில் அரச சொத்துக்களை பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு வேட்டை 9ஆயிரம் சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஈ.பி.எப் பண்ததை கொடுக்காமல் ஏமாற்றினார். போன்ற விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த உள்ளனர்.

இவ் விடயங்கள் பற்றி நாளை (23)காலை 10 மணிக்கு செத்சிரிபாயவில் உள்ள வீடமைப்பு சமுர்த்தி அமைச்சில் ஊடகவியலாளர் மாநாடொன்றை மேற்படி தொழிற்சங்கள் நடாத்துகின்றனர். 

அதே வேளை முன்னாள் அமைசச்ர் பசிலுக்கு ஆதரவான தொழிற் சங்கங்கள் 24ஆம் திகதி புதிய சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்த உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பிணரும் சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆரய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் எஸ் ஏ.டி ஜகத்குமார தெரிவித்தார்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் முன்னைய அரசுக்கு ஆதரவானவர்கள் நாளை மறுதினம் 24ஆம் திகதி காலை 9.00 மணிக்கு செத்சிரிபாய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை புதிய அரசுக்கு எதிராக நடாத்த உள்ளனர்.

தற்போதைய ஜ.தே.கட்சி அரசு மற்றும் சமுர்த்தி அமைச்சரின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கு 200 வீதம் சமுhத்தி என தெரிவித்தும் இதுவரை கொடுக்காமை, சமுர்த்தி உத்தியோகத்தர்களது ஈ.பி எப் பணத்தை 2 வாரங்களுக்குள் பெற்றுத் தருவேன் என்று சொல்லியும் நிதி அமைச்சில் பணம் இல்லாமல் அதனை இடை நடுவில் விட்டுவிட்டார்.

சமுர்த்தி கொடுப்பணவை 200 வீதம் என்று சொல்லியும் ;இதுவரை வழங்காமை சமுர்த்தி வங்கிப் பணத்தை கடனாக வழங்குதல் மற்றும் ஜ. தே.கட்சியினர் சமுர்த்தி நிறுவனத்தில் அரசியல் லாபம் தேடுவது அரசியல் ரீதியாக இடமாற்றம் பழிவாங்கள் போன்ற பல்வேறு தொழிற்சஙக் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -