ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அர­சியல் குற்றப் பிரே­ர­ணை­யொன்றை முன்­வைக்க திட்டம்!

பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்த அர­சாங்கம் தயா­ரானால் அதைத் தடுப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அர­சியல் குற்றப் பிரே­ர­ணை­யொன்றை முன்­வைக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் ஒரு தரப்­பினர் கவனம் செலுத்தி வரு­வ­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட கையொப்­பங்­க­ளுடன் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அர­சியல் குற்றப் பிரே­ரணை கைய­ளிக்­கப்­படும் பட்­சத்தில் அதனை சபா­நா­யகர் ஏற்றுக் கொண்­டதன் பின்னர் குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்னர் பாராளுமன்றத்தை ஜனாதி­ப­தியால் கலைக்க முடி­யாது என்­பதே இந்த அர­சியல் குற்றப் பிரே­ர­ணையின் நோக்­க­மாகும்.

பாரா­ளு­மன்­றத்தில்பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -