19ஆவது திருத்தச்சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிடின் நாடாளுமன்றம் கலைக்கப்படும்!

ரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர், இதனை கூறியுள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விவாதம் எதிர்வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் நடைபெறும்.

குறித்த திருத்தச் சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், குறித்த கட்சிகளால் பரிந்துரை செய்யப்பட்ட திருத்தங்களை 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -