ஜோதிகா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை 8 வருடமாக மறைத்தார் – சூர்யா!

ஜோதிகா திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு நடித்து வரும் படம் 36 வயதினிலே. 

மலையாளத்தில் வெளிவந்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீமேக்கே 36 வயதினிலே. இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். சென்னையில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகன் மற்றும் மகள்களுடன் கலந்துகொண்டார்.

மேலும் சிவகுமார், கார்த்தி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், பாண்டிராஜ், வெங்கட் பிரபு, ராதாமோகன், பாலா, தரணி மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

சூர்யாவின் அம்மா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் படத்தில் இடம்பெற்ற வாடி ராசாத்தி பாடலை பின்னணி பாடகி லலிதா பாடினார். 

பின்னர் சூர்யா பேசும்போது; 

இந்த படத்தோட இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் தயாரிப்பாளர் தனஞ்செயன் மூலமாகத்தான் எனக்குத் தெரியும். 8 வருடமாக என்னையும் என் குழந்தைகளையும் பராமரிப்பதில் அக்கறை காட்டிய ஜோதிகா தனது மனதுக்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மூடி மறைத்து வைத்துக் கொண்டே இருந்துள்ளார்.

ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் வந்து இந்த கதையை சொன்னதும் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை ஜோதிகாவின் முகத்தில் பார்த்தேன். ஜோதிகாவை உடனே என்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிக்க வைக்க முடிவெடுத்தேன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று என் மனதில் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. இப்படத்துக்காக 36 வயதுடைய 10 பெண்களுக்கு அவர்களுடைய நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -