கல்முனை - நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் சில ரவைகளும் கல்முனை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான கூட கட்டிடத்தின் மேற்கூரையை திருத்துவதற்கு இன்று சனிக்கிழமை காலை கூரைகளை பிரித்த போதே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் எஸ். சபாரத்தினம் கல்முனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் ரீ 56 ரக துப்பாக்கியையும் சில ரவைகளையும் மீட்டெடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ந-த்)
