பைஷல் இஸ்மாயில் -
இலங்கைக்கான இந்திய தூதுவர் சுஷ்மா சுவராஜை 07/03/2015 கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சு வார்த்தை ஒன்றை நடாத்தினர்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி, கட்சியின் பிரதித் தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பல விடையங்களைப் பற்றி பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் சுஷ்மா சுவராஜ் தெரிவிக்கையில்,
இந்திய அரசால் வட மாகாணம் எவ்வாறு கவனிக்கப்படுகிறதோ அது போன்றே கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் இந்தியா அரசாங்கம் கவனிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதன் போது கிழக்கில் அமைந்துள்ள ஆட்சி சம்மந்தமாகவும் விரிவாகப் பேசப்பட்டதுடன் இலங்கைக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வருகை தரவிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகை பற்றியும் ஆராயப்பட்டது.
