ஐ.நாவின் விசேட பிரதி நிதிகளில் ஒருவரான பப்லோ டி கிரிப் இன்று இலங்கைக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மை, நல்லிணக்க செயல்முறைகள் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையும் என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே பப்லோ டி கிரிப் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார்.
ஆறு நாள் விஜயமாக இலங்கை வரும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி, அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு வருகை தரும் ஐ.நாவின் முதலாவது உயர் மட்டப் பிரதிநிதி இவராவார்.