கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கு ஆட்சி மாற்றத்தின் பின்பு வீதி அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டதானது சம்மாந்துறை தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட கௌரவமாகும் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான எம்.ஐ.தஜாப்தீன் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முடிவெடுத்து அம்பாரை மாவட்டத்திற்கு அமைச்சு பதவி வழங்கியதையிட்டு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியால் அதிகாரம் அற்ற நி(லைமாறி இன்று கிழக்கின் புதிய ஆட்சியில் கிழக்கு வீதி அபிவிருத்தி அமைச்சு ஊடாக அனைத்து பிரதேசங்களிலும் சிறந்த சேவைகள் வழங்கி அம்பாரை மாவட்டத்தின் கிரமங்கள், நகரங்கள் போன்றவற்றில் அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்த அமைச்சர் மன்சூர் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.