எம்.ஏ.தாஜகான்-
நாடளாவிய ரீதியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏனைய அமைச்சுக்களில் இணைப்பதற்கான திட்டம் நேற்று வெளியானது.
அந்த திட்டத்தின் அடிப்படையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உறுப்பினர்களில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான சம்மதத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது பற்றி கருத்து வெளியிட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஜெம்சித் பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 33 பேர் கடமைபுரிகின்றனர்.
இவர்களை ஏனைய திணைக்களத்திற்கு இணைப்பதற்கான புதிய திட்டம் நேற்று பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 15 பேர் பொத்துவிலில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையினை கருத்திற் கொண்டு கல்வி திணைக்களத்தில் இணைவதற்கான விருப்பக் கடிதம் தருவதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் சம்மதத்தை ஏற்று கல்வித் திணைக்களத்துக்குள் இணைப்பதற்கான செயற்பாட்டை செய்வதற்க்கு அரசியல் அதிகாரங்களில் உள்ளவர்கள் முன் வர வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
பொத்துவில் பிரதேச அரசியல்வாதிகளே இதனை முன்னெடுப்பீர்களா?