அஸ்ரப் ஏ சமத்-
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் மாவட்ட இணைப்பாளர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி - இன ஜக்கியத்தை ஏனைய சமுகங்களுடன் கட்டியெழுப்புவது என்ற தலைப்பில் இன்று முழுநாள் கருத்தரங்கு பொரளை சென்றக் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு முன்னணியின் தலைவர் எ.ஐ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது. முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் , அஷ்ஷேக் நஜா முகம்மட், அமானா வங்கியின் கணக்காளர் அசாம் அமீன், சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் சுங்க அதிகாரி எஸ். லுக்மான் ஆகியோறும் கலந்து கொண்டு இக் கருத்தரங்கில் கருத்துக்களை முன்வைத்தனர்.