13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த சேனா­ரத்ன உறு­தி - ஹஸன் அலி!

13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­ மு­றைப்­ப­டுத்­தல் வேண்டும் என்­பதில் புதிய அர­சாங்­கத்தின் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மிகவும் உறு­தி­யாக இருந்து செயற்­ப­டு­கின்றார் என சுகாதார இராஜாங்க அமைச்­சரும் ஸ்ரீ­லங்கா முஸ்­லிம் ­காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­க­முமான ஹஸன் அலி தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பில் உள்ள பல வைத்­தி­ய­சா­லை­களை பார்வையிட்டு அங்­குள்ள குறை­நி­றை­களை கேட்­ட­றியும் பொருட்டு இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலிஉட்­பட அவ­ரது உய­ர­தி­கா­ரிகள் கொண்ட குழு­வொன்று நேற்று களு­வாஞ்­சி­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

களு­வாஞ்­சி­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­சகர் டாக்டர் சுகுணன் தலை­மையில் வைத்­தி­ய­சாலை கேட்போர் ஒன்று கூடலில் நடை­பெற்­றது.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­றுகையில்

இன்று கிழக்கு மாகா­ணத்­திற்கு சகல அதி­கா­ரங்­களும் கொண்ட மாகா­ண­ச­பை­யாக கிழக்கு மாகா­ண­ சபை திகழ வேண்டும் என்ற நோக்­கத்­திற்­காக கிழக்கு மாகா­ண­ ச­பையில் அனைத்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக ஒரு தேசிய அர­சாங்கம் ஒன்­றினை அமைத்­தி­ருக்­கின்றோம் அத­னூ­டாக அனைத்து வளங்­க­ளையும் பெற்­றுக்­கொள்ள அனை­வரும் முன்­ வ­ர­வேண்டும்.

இலங்­கையில், அனைத்து இனங்­க­ளுக்கும் அனைத்து அதி­கா­ரங்­களும் கிடைக்­க வேண்டும் என்­பதில் எமது சுகா­தார அமைச்சர் உறு­தி­யாக இருந்து செயற்­பட்டு வரு­கின்றார் அத­னொரு கட்­டமே இந்த நாட்­டிலே 13ஆவது திருத்­தச்சட்டம் நடை ­மு­றைப்­ப­டுத்­தப்­படல் வேண்டும் என்றும் அத­னூ­டாக சிறு­பான்மை இனம் அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதில் அவர் மிகுந்த அக்­க­றையு­டன் செயற்­பட்டு வரு­கின்றார்.

மாகா­ண­ச­பையின் கீழ் இயங்கும் அனைத்து வைத்­தி­ய­சா­லை­களும் முன்­வைக்கும் ஒரு முக்­கிய பிரச்­சினை தங்­களை மாகா­ண­ ச­பையின் கீழ் இருந்து விடு­ப­டச்­ செய்து மத்­திய அர­சாங்­கத்­திற்குள் இணைப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­களை செய்து தர ­வேண்டும் எனும் கோரிக்­கை­யினை முன்­வைக்­கின்­றார்கள்.

ஆனால் மத்­திய அரசு மாகா­ண­த்­தின்கீழ் உள்ள அனைத்து வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கும் ஒழுங்­கான முறையில் வளங்­களை பங்­கீடு செய்­தி­ருக்­கு­மானால் எந்­த ­ஒரு மாகா­ண­ ச­பையின் கீழ் உள்ள வைத்­தி­ய­சாலை­யும் மத்­தி­ய­ அ­ர­சாங்­கத்துடன் இணைய வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைக்க மாட்டார்கள். மாறாக மத்­திய அரசு ஒழுங்­கான முறையில் வளங்­களை பங்­கீடு செய்­யா­மையே இதற்கு முழுக்­கா­ர­ண­மாகும்.

எதிர்­வரும் காலத்தில் இவ்­வா­றான பிரச்­சினை­க­ளு­க்கு தீர்வு காண்­பதற்­கா­கவே 100 நாள் வேலைத்­திட்­டத்­தினை மைய­மாக வைத்து அமைச்­சரின் வேண்­டு­தல்­களுக்கு ஏற்ப கிழக்கு மாகா­ணத்திலுள்ள அனைத்து வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கும் சென்று பிரச்­ச­ினை­களை ஆராய்ந்து அமைச்­ச­ரிடம் கோரிக்­கை­களை முன்­வைக்­கவி­ருக்­கின்றேன்.

அத­னொரு கட்­ட­மாக அண்­மையில் அம்­பா­றையில் உள்ள 17 வைத்­தி­ய­சாலை­களுக்கும் சென்று அங்கு உள்ள வைத்­தி­ய­சாலை­களின் பிரச்­ச­ினை­களை அமைச்­சரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றி­ருக்­கின்றேன்.

30 வருட போராட்ட காலத்தில் இரண்டு இனங்­க­ளுக்­குள்ளும் ஒரு கசப்­பு­ணர்வு இருந்­ததன் கார­ண­மாக முஸ்­லிம்கள், தமிழர் பிர­தே­சங்­க­ளுக்குச் செல்­லா­மலும், தமி­ழர்கள் முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்­குச்­செல்­வ­திலும் மனக்­க­சப்­புற்­றி­ருந்­தார்கள். அந்­நிலை இனிமேல் எவ­ரி­டமும் வரக்­கூடாது. அதனை ஓரங்­கட்­டி­விட்டு இரண்டு சமுகமும் ஒரு­வரை ஒருவர் புரிந்து செயற்­ப­ட­முன்­வ­ர­வேண்டும்.

வட­, கி­ழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் சமூ­கத்­தி­னது தாயகம். இக்­கோட்­பாட்­டினை அடிப்­ப­டை­யாக வைத்­துத்தான் முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் சிந்தனைகள் மூலம் செயற்பட்டு வருகின்றார்கள். 

இதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் எமது இரண்டு இனங்களும் ஒன்று சேர்ந்து, பழைய மனக்கசப்புக்களை மறந்து, எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து எமது மக்களின் குறைகளை போக்க உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -