த.நவோஜ்-
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்கு உட்பட்ட செங்கலடி ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பாலசுப்பிரமணியம், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எஸ்.ஜெயராஜ், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பிர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இன்போது அணி நடை பவனியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மைதான நிகழ்ச்சிகள், பழைய மாணவர் நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கண்காட்சி, உத்தியோகத்தர் நிகழ்ச்சிகள், பழைய மாணவர்கள் நிகழ்ச்சிகள், பெற்றோர் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதன்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)