பொத்துவிலில் இரத்த வங்கி திறந்து வைப்பு!














தர்ஜுமிலாத்-
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவையாக இருந்து வந்த இரத்த வங்கியானது 2015.02.24 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் இராஜாங்க சுகாதார அமைச்சருமான கௌரவ எம்.ரீ.ஹசன் அலி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அவர்கள் பொத்துவில் பிரதேசத்தின் கல்வி, சுகாதார, போக்குவரத்து, நீர்பாசனம் மற்றும் ஏனைய அத்தியவசிய அபிவிருத்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு போதுமான அதிகாரம் இன்மையினால் அவற்றினை கடந்த அரசாங்க ஆட்சியில் செயற்படுத்த முடியாமல் இருந்தது. 

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சிக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதனைக் கொண்டு குறித்த அபிவிருத்தித் தேவைகள் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்படுமாவிருந்தால், பொத்துவில் மக்கள் எதிர்காலத் தேர்தல் தொடர்பில் எடுக்கும் முடிவுகள் கட்சிக்குப் பாதகமாக அமைவதை யாராலும் தடுக்க முடியாது. 

எனவே குறித்த குறைபாடுகளை அவசரமாக தீர்த்துவைக்க கட்சியும் அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இரத்த வங்கியை அமைக்க நிதி ஒதுக்கிய முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ எம்.ஐ.மன்சூர் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -